கோவையில் நாளை மின்தடை இடங்கள் அறிவிப்பு

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் ஜூலை 14 ஆம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இருகூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

பகுதிகள் : இருகூர், ஒண்டிப்புதூர், வட்டார்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் -ஒரு பகுதி, சிந்தாமணிபுதூர், கண்ணம்பாளையம்- ஒரு பகுதி, சின்னியம்பாளையம் -ஒரு பகுதி, வெங்கடாபுரம், தொட்டிபாளையம் – ஒரு பகுதி, கோல்டுவின் – ஒரு பகுதி ஆகிய இடங்களில் நாளை மின் தடை ஏற்படும் என்று  மின் வாரியாத் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.