கோவையில் மூன்று நாள் திருமண வைபவ கண்காட்சி

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் தி ஈவன்ட்ஸ் மேனேஜர்ஸ் சங்கம் சார்பில் வருகிற 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை திருமண வைபவ கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சி தலைவர் ஸ்ரீ சைலம் சந்திர சேகரன், தி ஈவன்ட்ஸ் மேனேஜர்ஸ் சங்க தலைவர் ஜெயக்ரிஷ்ணா, துணைத் தலைவர் கார்த்திக் மாற்றும் செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் கூறும் போது, தென்னிந்திய அளவில் நடக்கும் இந்த கண்காட்சி இந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சி மேலாண்மை சங்கத்துடன் சென்னை கிளை இணைந்து நடத்துகிறது. தமிழ்நாடு வாடகை பாத்திர உரிமையாளர் சங்கம் ஆதரவுடன் நடக்கிறது. இந்த நிகழ்வுக்கு ராகவேந்திரா டெக்கரேட்டர்ஸ் வலுவூட்டுகிறது. விஸ்வா அன்ட் தேவ்ஜிஇணைந்து வழங்குகிறது. நூற்றுக்கும் மேர்பாட்ட அரங்குகளை அமைக்க உள்ளனர். திருமண நிகழ்ச்சியை திட்டமிடுபவர்கள, அலங்காரம் செய்வோர், ஆடை வாடிவாமைப்பாளர்கள், மலர் அலங்காரம் செய்வோர், திருமண அமைப்பாளர்கள் . போட்டோர்கிராபர்கள, சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. திருமண நிகழ்ச்சிகள் குறித்த கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. விருந்தோம்பல் பங்குதாரராக தி ரெசிடென்சி டவர்ஸ், மால் பங்குதாரராக ப்ரூக்பீல்ஸ், இடம் பெருகிறது. இந்திய அமெரிக்க வர்த்த சபையின் தமிழ்நாடு கிளை பத்மஸ்ரீ சக்திவேல், இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை கிளை தலைவர் ரமேஷ், இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் இலட்சுமி நாராயணசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.