கோவை மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் கருத்தரங்கம்!

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம் மற்றும் திருக்குறள் உலகம் கல்விச் சாலை இணைந்து நடத்தும் ” திருக்குறள் பார்வையில் மானுட மேன்மைக்கான ஐந்து நெறிமுறைகள் கருத்தரங்கம் வருகிற ஜூன் 24ஆம் தேதி சனிக்கிழமை கோவை மாவட்ட மைய நூலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

அன்பின் உயர்வு, இழிவான செயலுக்கு அஞ்சுதல், ஒப்புரவின் மேன்மை, இரக்கத்தின் நன்மை மற்றும் உள்ளத்தின் ஒழுங்கு ஆகியன இக்கருத்தரங்கில் இடம்பெறும் நெறிமுறைத் தலைப்புகள் ஆகும். எனவே, அணைத்து கல்லூரி மாணவ, மாணவியர், மத்திய – மாநில போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும் தேர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும், இக்கருதரங்கத்திற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.