அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும், சோதனைக்குப்பின் முழு விவரங்கள் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளார். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.