மாபெரும் கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்த நா.கார்த்திக்

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு 26வது வட்ட கழக செயலாளர்கள் மாடசாமியின் ஏற்பாட்டில், பீளமேடு பகுதி-1 செயலாளர் செந்தமிழ் செல்வன், மாவட்ட பிரதிநிதி துரைசாமி முன்னிலையில், கோவை பீளமேடு அகிலாண்டேஸ்வரி திருமண மண்டபத்தில் சத்யன் கண் மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் க்ளாக்கோமா பவுண்டேசன் சார்பில் மாபெரும் கண் சிகிச்சை மருத்துவ முகாமை, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பாலச்சந்தர், மாவட்ட பொறியாளரும், அணி துணை அமைப்பாளருமான வசந்தகுமார், இளைஞர் அணி, கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.