உலக மருந்தாளுனர் தினத்தை முன்னிட்டு இந்திய மருந்தாக்கியல் சங்கம் சார்பில் விழா .

இந்திய மருந்தாக்கியல் சங்கம் – கோவை கிளை மற்றும் பி எஸ் ஜி பார்மஸி கல்லூரி இணைந்து உலக மருந்தாளுனர் தினத்தை கொண்டாடினர். மருந்தாளுனர்கள் உங்கள் மருந்தின் நிபுணர்கள் என்ற நோக்கத்தை இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக கொண்டு உள்ளனர். கோவையில் உள்ள 13பார்மஸி கல்லூரிகள் இந்த விழாவில் பங்கு பெற்றனர். இந்திய மருந்தாக்கியல் சங்கத்தின் துணை தலைவர் ஜெயசீலன் சிறப்பு வருந்தினாராக கலந்து கொண்டார். மேலும் தமிழ்நாடு மாநில பார்மஸி கவுன்சில் தலைவர் சின்னசாமி, டிரக் கண்ட்ரோல் துறையின் துணை இயக்குனர் குருபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பி எஸ் ஜி பார்மஸி கல்லூரியின் டீன் ராமலிங்கம் , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.