கோவையில் பேருந்து நிற்த்த அறிவிப்பான் பொருத்தப்பட்ட பேருந்தில் பயணித்த அமைச்சர்கள்

கோவை: கோவையில் GPS பேருந்து நிறுத்த அறிவிப்பான் பொருத்தப்பட்ட பேருந்தில் அமைச்சர்கள் பயணித்தனர்.

முதியவர்கள், கண் பார்வையற்றவர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது பேருந்து நிறுத்தங்களை அறிவதற்கு GPS மூலம் பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும் கருவிகள் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கோவையில் முதல்கட்டமாக 65 பேருந்துகளுக்கு இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மேலும் அப்பபேருந்தில் பயணம் மேற்கொண்ட அமைச்சர்கள் அந்த வசதிகளை பரிசோதித்தனர்.

சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து, சிவானந்தா காலனி வரை பயணம் மேற்கொண்ட அவர்கள் ஒலி அறிவிப்பான் கருவி சரியான முறையில் இயங்குவதை பரிசோதித்தனர்.