லட்சுமி மில் சிக்னல் அகற்றம் இனி காத்திருக்க தேவையில்லை.

கோவை அவிநாசி ரோட்டில் ஒப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

மொத்தம் 305 தூண்கள் அமைக்க வேண்டும் இதில் 292 இடங்களில் துளையிடப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. லட்சுமி மில் சந்திப்பில் 3 தூண்கள் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இதற்காக லட்சுமி மில் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அகற்றப்பட்டு இரு வழி தடத்திலும் வசதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா சிலை குப்புசாமி நாயுடு மருத்துவமனை பகுதிகளில் இருந்து வாகனங்களில் வருவோர் லட்சுமி மில்ஸ் சந்திப்பில் காத்திருக்காமல் ஹோப் காலேஜ் பகுதிக்கு நேரடியாக செல்ல வேண்டும்.

புலிக்குளம் செல்ல திண்டுக்கல் வேணு பிரியாணி கடைக்கு எதிரே அமைந்துள்ள யூடேன் பகுதியில் திரும்பிச் செல்ல வேண்டும்.

சுங்கம் செல்ல அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்வதற்கான யூடேன் பகுதியில் திருப்பிச் செல்ல வேண்டும். ஹோப் காலேஜ் பகுதியில் இருந்து வருவோர் அண்ணா சிலை பகுதிக்கு லட்சுமி மில்ஸ் சந்திப்பில் நிற்காமல் நேராக செல்லலாம்.

புலியகுளம் செல்வோர் இடது புறம் திரும்ப வேண்டும். காந்திபுரம் செல்ல விரும்புவோர் ஜேnன்  ஹோட்டல் முன்புறமாக யூடேன் பகுதியில் திரும்பி லட்சுமி மில் சந்திப்புக்கு வந்து இடப்புறம் செல்ல வேண்டும்.

வழக்கமாக லட்சுமி மில்க் சிக்னலில் 3 நிமிடம் ரெட் சிக்னல் போடப்படும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கும் சிக்னல் கிடைத்ததும் வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு கிளம்புவார்கள்.போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

தற்போது சிக்னலில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் வாகனங்கள் சீராக செல்கின்றன.

இதை போக்குவரத்து போலீஸ் சாரும் மாநில நெடுஞ்சாலை துறை சாலை பாதுகாப்பு குழுவினரும் கண்காணித்து வருகின்றனர்.