பத்திரிகையாளர்களை பற்றி அவதூறு பரப்பி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பியும், காவல் நிலையங்களில் பொய் புகார்களை அளித்து வரும் கில்மோர் என்ற நபர் மீதும், அவருக்கு துணை போகும்.

அவரது காவல்துறை சகோதரர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை,திருப்பூர்,தேனி,பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களை சேர்ந்த சுமார் 60 மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், அவருக்கு துணையாக இருக்கும் அவரது சகோதரர் காவல் துறை சேர்ந்த நெப்போலியன் என்பவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அனைவரும் கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.