ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிப்பு 

ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் (ஜி.கே.என்.எம்) சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கலந்துகொண்டு, 25 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய செவிலியர்களை கௌரபடுத்தி விருதுகள் வழங்கினார். இவ்விழாவிற்கு முன்னதாக, செவிலியர்கள், தங்களின் இதர திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம், பேப்பர் ப்ரெசென்ட்டேஷன், கவிதை எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற செவிலியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் சுமார் 1400 செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிபிடித்தக்கது.