இந்துஸ்தான் கல்லூரியில் ‘சமூகப் பாதுகாப்புப் பிரச்சினைகள்’ குறித்த பயிற்சித் திட்டம்

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித் துறை சார்பாக, ‘சமூகப் பாதுகாப்புப் பிரச்சினைகள்’ குறித்த மூன்று நாள் மாநில அளவிலான பயிற்சித் திட்டம் நடைபெற்றது.

தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கீதா தலைமை வகித்தார். இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர் பிரியா பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி வரவேற்புரையாற்றி பேசுகையில்: சமூக தீமைகளை களைவதற்கு சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு சமூகப்பணி கல்வியாளர்கள் ஒருவருக்கொருவர் இணைவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கூறினார்.