கே.எம்.சி.ஹெச் பார்மசி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

கே.எம்.சி.ஹெச் பார்மசி கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் உட்சுரப்பியல், நீரிழிவு நோய் நிபுணர் வித்யா ராஜீவ் ஜஹாகிர்தர், இன்றைய வாழ்க்கையில் மகளிர் சமுதாயத்தினரின் பல்வேறு பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து உரையாற்றினார்.

பெண்களின் உடல் நலம் குறித்து டாக்டர் வித்யா கூறுகையில், பெண்களின் மனோபாவம் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய விதம், பிசிஓடி, மாதவிடாய் முடிவுறும் பருவம் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு சுகாதார பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தார். ஹெச்பிவி தடுப்பூசி மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்த தகவல்களையும் அவர் வழங்கினார்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பு விருந்தினர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். “கல்வி முறை பாலின சமத்துவத்தை கற்பிக்கிறதா” என்ற தலைப்பில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்களிப்புடன் விவாதம் நடத்தப்பட்டது.