ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மகளிர் தின விழா: “பாலின சமத்துவத்தை அடைய இன்னும் போராடுகிறோம்”!

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வர் சித்ரா, பாலின சமத்துவத்தை அடைய நம் நாடு இன்னும் போராடி வருகிறது என்றும், இந்த இலக்கை அடைய நாம் அனைவரும் இன்னும் 100 ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்று கூறினார். சமூக வலைத்தளங்களை மிகவும் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினர் பெஸ்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீப்ரியா, மாணவிகள் வாழ்நாள் முழுவதும் கற்றலை தொடரவும், அவர்கள் எதைச் செய்தாலும் தன்னம்பிக்கையுடன் இருக்கவும், கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மகளிர் தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.