எஸ்.பி.ஐ., வங்கி சார்பில் வீட்டுக் கடன் மேளா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ), கிரெடாய் அமைப்புடன் இணைந்து வழங்கும் வீட்டுக் கடன் மேளா கோவை ரயில் நிலையம் அருகே உள்ள குறிஞ்சி காம்ப்ளக்சில், உள்ள எஸ்.பி.ஐ வளாகத்தில் துவங்கியது.

இந்த மேளாவினை கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். துவக்க விழாவில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மண்டல மேலாளர் இன்பரசு, மண்டல மேலாளர் ஷிபு தாமஸ், எச்.எல்.எஸ்.டி. முதன்மை மேலாளர் பானிக்குமார் கலந்துகொண்டனர்.

இந்த மேளாவில் உடனடி வீட்டுக் கடன் ஒப்புதல் வழங்கப்படுகிறது. இந்த முகாம் நாளை (பிப்ரவரி 19) மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.