தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி விழாவிற்கு தலைமையேற்று சிறுதானிய கருத்துக் காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் ஜெனரல் அகர்வால் பங்கேற்றார். தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை இயக்குனர் அண்ணாதுரை இணைய வழியாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
சர்வதேச சிறுதானிய விழா கருத்துக் காட்சியில் சிறுதானிய பயிர்களில் புதிய ரகங்கள், தொழில்நுட்பங்கள், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள், உழவர்களின் சிறுதானிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.