ஜெ.பி. நட்டா வருகை: கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள கடைகள் அடைப்பு

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, கோவை லோக்சபா தொகுதியில் அமைக்கப்பட்டு உள்ள பூத் கமிட்டி உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், கோவை – நீலகிரி மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும், மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் இன்று கோவை வருகை தருகிறார்.

முன்னதாக கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்.

இதனால் அவரது வருகையையொட்டி அந்த தெருவில் உள்ள 100 க்கும் மேற்பட்ட துணி கடைகள் மற்றும் புத்தக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்கு முன்பாக 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.