சென்னை சில்க்ஸ் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி

சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸ் & ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனங்கள், தினமேகம் அறக்கட்டளை மற்றும் அறம் செய்வோம் அறக்கட்டளை யுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி தனித்திறமையை வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழுடன் பரிசும் கொடுத்து கௌரவிக்கப் பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நிறுவன மேலாளர் பாலமுருகன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மணிகண்டன், கவிதா, ஆறுச்சாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.