சுவர்கா பவுண்டேஷன் சார்பில் ‘நான் சிறப்புமிக்கவன் 2023’ காலண்டர் அறிமுகம்

சுவர்கா பவுண்டேஷனின் 8 வது ஆண்டு விழாவையொட்டி தனது 8 வது பதிப்பான ‘நான் சிறப்புமிக்கவன் 2023’ காலண்டரை கோவை ரெசிடென்சி ஓட்டலில் சனிக்கிழமை அறிமுகம் செய்தது. 12 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், உலக சாம்பியன்களின் படங்களுடன் இந்த காலண்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டார். நிகழ்வில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார்.

சுவர்கா பவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா இதில் பங்கேற்றார்.