ஆர்.வி. கலை கல்லூரி பாரதியார் நினைவு தினப்போட்டி

கோவை, காரமடை டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் திங்கள் கிழமையன்று ‘பாரதியார் நினைவு தினப்போட்டிகள்’ நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் ஜெயந்தி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக காரமடையின் ‘புகழ்’ தொலைக்காட்சி நிறுவனர் ஜான்சன் கலந்து கொண்டு “பாரதியின் கவிதைகளைப் படித்து அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்” என்று பல கருத்துக்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். மேலும், நிகழ்வில் பாரதியாரை நினைவு கூறும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப்போட்டி மற்றும் பாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.