கேரளாவிற்கு உதவ உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பியது

குரங்கு அம்மை நோய் தொற்று 60க்கும் மேற்பட்ட நாடுகளில், 9,000க்கும் மேற்பட்டோருக்கு பாதித்துள்ளதாக சுகராதர துறை தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய் தொற்று இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் உள்ள ஒரு நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய் பரவாமல் தடுக்க சில தடுப்பு நடவடிக்கைகளுக்காக உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. இந்நிலையில், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த நபர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கடந்த 12ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்து என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அனைத்து உடல் உறுப்புகளும் இயல்பாக இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

அந்த நபருடன் கூட இருந்தவர்கள், விமானத்தில் உடன் பயணித்த 11 பேரையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வீனா ஜார்ஜ் கூறினார். இந்நிலையில், கேரளா அரசுக்கு உதவுவதற்காக உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.