எஸ்.என்.எம்.வி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் (எஸ்.என்.எம்.வி) கல்லூரியின் முதுகலை வணிக மேலாண்மைத் துறையின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஞாயிறு அன்று நடைபெற்றது. 1998 முதல் 2000 கல்வியாண்டில் பயின்ற 50 மாணவர்களும், 9 பேராசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.

22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு ஏற்பட்டதால் தங்கள் மாணவர்கள் எட்டியுள்ள உயரத்தைக் கண்டு ஆசிரியர்கள் நெகிழ்ச்சியடைந்து பாராட்டுகளையும், வாழ்த்துகளயும் கூறினர். நிகழ்வில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு நன்றியையும் மரியாதையையும் கூறி கௌரவித்தனர். கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணி வரவேற்புரை வழங்கினார். மேலான்மைத்துறை இயக்குநர் முத்துக்குமார் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.