இன்று காவல் உதவி ஆய்வாளர் தேர்வு

தமிழ்நாடு முழுவதும் காவல் துறை உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத்தேர்வு இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேரடி உதவி காவல் துறை ஆய்வாளர் பணிக்கு தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

காவல்துறைஉதவி ஆய்வாளர் பணிக்கு நேரடி எழுத்து தேர்வில், முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.

காவலர், உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான விதி முறைகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழ் தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு கணக்கில் ஏற்றுக் கொள்ளப்படும் என, கூறப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெறுகிறது. காலையில் எழுத்துத் தேர்வும் , பிற்பகலில் முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வும் நடைபெறுகிறது.

இந்த தேர்வு எழுத வருபவர்கள் 8:30 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும் . தேர்வு எழுத வரும்போது பால் பாயின்ட் பென் , ஹால் டிக்கெட் , ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும்.

மேலும், தேர்வு எழுதும் அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் ,லேப்டாப் போன்ற பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.