புதுச்சேரியில் மீண்டும் கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இந்தியாவில் மட்டும் 4.32 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 5.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டாண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் முதல் வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக புதுச்சேரியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 36, காரைக்காலில் 2, ஏனாமில் 4 என, மொத்தம் 42 பேருக்கும் புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 182 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,64,065, பேர்கள் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,66,209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,962 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.