இ.பி.எஸ் ஆதரவாளரா? என கேட்டு முன்னாள் செயலாளர் மாரிமுத்துக்கு  அடி உதை

அதிமுக  முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் உடன் வந்த நபரை  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரா என, கேட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தோர்  தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்தபோது, அந்த அலுவலகத்தில் இருக்கும்  சிலர் அவருக்கு  எதிராக கோஷம் எழுப்பினார். ஜெயக்குமார் உள்ளே சென்றதையடுத்து அவருடன் வந்தவர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட தொடங்கியது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23 ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை எப்படி நடத்துவது என்பது பற்றியான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பேசிய பலரும் ஒற்றை தலைமை என்ற கருத்தை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்களின் விருப்பம் என, கருத்து தெரிவித்தார்.

அதன் பிறகு, ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக,  ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை புரிந்தார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைத்தியலிங்கம் திண்டுக்கல் சீனிவாசன்  ஆகியோரும்  கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது ஜெயக்குமார் உள்ளே வந்தபோது, அவருடன் வந்த நபரை, எடப்பாடி ஆதரவாளர் என, கேட்டு  அடிக்க தொடங்கினர். அங்கு  காயமடைந்த நபர் பெரம்பூர் முன்னாள் செயலாளர் மாரிமுத்து என்பதும் அவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் என்றும்  தெரியவந்தது.