அரசு  ஊழியர்களுக்கு ஐபேட் மத்திய அரசு முடிவு

அரசு ஊழியர்கள் கம்பியூட்டர் அட்வான்ஸ் பயன்படுத்தி ஐபேட் வாங்கிக்கொள்ளலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தனிநபர் கணினி வாங்குவதற்காக 50,000 ரூபாய் வரை அட்வான்ஸ் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விதிமுறைகள் கடந்த 2016 அக்டோபர் மாதம் நிதி அமைச்சகத்தால் திருத்தப்பட்டது. இந்த சலுகையை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்நிலையில், கணினி வாங்குவதற்கு வழங்கப்படும் அட்வான்ஸ் தொகையை வைத்து மத்திய அரசு ஊழியர்கள் ஐபேட் (iPad) வாங்கிக்கொள்ளலாம் என, மத்திய அரசு தெரியப்படுத்தியுள்ளது.

கணினி அட்வான்ஸ் தொகை பயன்படுத்தி ஐபேட் வாங்கலாமா என, அரசு ஊழியர்கள் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டதால், கணினி அட்வான்ஸ் பயன்படுத்தி அரசு ஊழியர்கள் ஐபேட் வாங்கிக்கொள்ளலாம் என, மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஐபேடுகள் (iPads) தனிநபர் கணினி என்ற வரையறைக்குள் வருவதாகவும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது.