குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு நேசனல் மாடல் பள்ளி குழு மற்றும் பன்னாட்டுச் சுழற்சங்கம் இணைந்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை அனுசரிக்க வ.உ.சி மைதானத்திலிருந்து நேசனல் மாடல் பள்ளி வரை 7 கி.மீ தூரம் வரை மிதிவண்டிப் பேரணியை நடத்தியது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்து அவரும் மிதிவண்டி ஓட்டினார். இப்பேரணியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 300 பேர் கலந்து கொண்டனர்.

பேரணியில் பங்கேற்றவர்களுக்கு நேசனல் மாடல் பள்ளித் தாளாளர் மோகன் சந்தர், பள்ளிச் செயலாளர் உமா மோகன் சான்றிதழ்களை வழங்கினர்.