வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் விழிப்புணர்வு நாடகம்

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் காட்சி ஊடகத் தகவல் துறை சார்பாக ‘ஏதாவது செய்’ என்ற விழிப்புணர்வு நாடக நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஃபீட் த சிட்டி மிஷன் நிறுவனர் ஜான் சாமுவேல், இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு நிறுவனர் ஷோபனா, வணக்கம் தோழர்களே நிறுவனர் நவீன் ரோஷன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மூன்றாம் பாலினத்தவர்க்கு சமத்துவம் வழங்குதல், தண்ணீரைச் சேமித்தல், போதைப் பொருள்களைத் தவிர்த்தல், உயிரைக் காப்பாற்றுதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல் கூடாது என்பன போன்ற கருத்துக்கள் அடங்கிய நாடகம் அரங்கேறியது.

திருநங்கைகளின் மனித உரிமை மீறல்களையும், சமூகத்தில் அவர்களின் நிலை குறித்தும் இந்நிகழ்வு எடுத்துக் கூறியது. மேலும், விவசாயம், தொழில்துறை மற்றும் மனித நுகர்வுக்கு இடையே தண்ணீரை சேமிப்பதின் அவசியத்தையும் இந்நிகழ்வு வலியுறுத்தியது.