வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் – சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

கோவை வாலாங்குளத்தில் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சீர்மிகு நகர திட்டப்பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் டிஆர்பி ராஜா மற்றும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழுவின் தலைவர் டி.ஆர்.பி ராஜா, எம்.எல்.ஏ.க்கள், கோவை மேயர் கல்பனா, துணை மேயர், ஆட்சியர் சமீரன் உள்ளிட்ட பலர் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.

இரண்டாம் கட்டமாக சுங்கம் பகுதியில் உள்ள வாலாங்குளம், வெள்ளலூர் குப்பைக்கிடங்கு, செல்வபுரம் தெலுங்குபாளையம் பகுதியில் குடிநீர் தொட்டியை ஆய்வை மேற்கொண்டனர்.