கோயம்புத்துார் சாய்சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் தொழிலில் சாதனை புரிந்தோர்களை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கும் நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த சிறப்பு விருதினை, இன்ஜினியர் சி.ஜே ரகுநாதனுக்கு, கோவை சாய்சிட்டி ரோட்டரி கிளப்பின் தலைவர் கோபிநாத் வழங்கினார்.
மேலும் இவ்விருதினை பற்றி மாவட்ட தலைவர் முத்துராமன் விளக்கினார். விருது பெற்ற சி.ஜே ரகுநாதனை காணொளி காட்சியில் திட்ட தலைவர் மாரப்பன் அறிமுகம் செய்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் ராஜசேகர் (3201), மற்றும் தலைமை விருந்தினராக பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், ரோட்டரி மாவட்டத்தின் முதல் பெண்மணி சாந்தி ராஜசேகர், மீரா ரகுநாதன், மாவட்ட இயக்குனர் குமரேசன், உதவி கவர்னர் கணேஷ்குமார் மற்றும் ஜிஜிஆர் அருள்குமரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.