ட்விட்டரை கைப்பற்றும் எலான் மஸ்க்!

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை ரூபாய் 3.3 லட்சம் கோடிக்கு வாங்குவது உறுதியாகியுள்ளது. மேலும் பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல் கூறுகிறது.

இன்று நடைபெறும் ட்விட்டர் நிறுவன நிர்வாக குழு கூட்டத்தில் அதிகார பூர்வ முடிவு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ரூ.3.56 லட்சம் கோடியை ஒதுக்கி இருப்பதாகவும் எலான் மஸ்க் அறிவித்திருந்தார். தற்போது சுமார் ரூ.3.3 லட்சம் கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க அவர் முன் வந்துள்ளார்.

எலான் மஸ்க் வாங்க வந்த விலையை ஏற்று ட்விட்டர் நிறுவனம் அவருக்கு விற்கப்படும் என தகவல் வெளியாகி வருகிறது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனம் செல்வதை தடுக்க நிர்வாக குழு இயக்குனர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த நிறுவனம் தன் வசமானதும் நிர்வாக குழு இயக்குனர்கள் அனைவரும் நீக்கப்படுவார் என்று எலான் எச்சரித்திருந்தார்.