பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா: புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள கோகுலம் பார்க் ஹோட்டலில் கோயமுத்தூர் பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா 2022 -23ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதன்மை ஸ்பான்சர் காவேரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் அரிமா வினோத் சிங் ரத்தோர் தலைமையில் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் மலர் கொடுத்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

குத்துவிளக்கேற்றி தொடர்ந்து நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், புதிய தலைவராக சரவணன், துணைத்தலைவர் லட்சுமணன், செயலாளர் ஜோசப், பொருளாளர் பிரசாத் சக்கரவர்த்தி, இணைச் செயலாளர் கணேஷ்குமார், ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களை பி.ஏ.ஐ அகில இந்திய முன்னாள் தலைவர் பீஷ்மா ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்.என்.எஸ் இன்ஸ்டியூட் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், பி.ஏ.ஐ மாநில தலைவர் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கோயம்புத்தூர் பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.