கே.ஜி பிசியோதெரபி கல்லூரி சார்பில் ‘கே.ஜி நெக்சஸ் – 2022’

கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரி மைதானத்தில் கே.ஜி பிசியோதெரபி கல்லூரி சார்பில் ‘கே.ஜி நெக்சஸ் – 2022’ என்ற 2 வது தேசிய கல்லூரிகளுக்கிடையேயான பிசியோதெரபி சந்திப்பு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் ஐ.பி.எஸ் கலந்துகொண்டு நிகழ்வினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கே.ஜி.குழுமங்களின் தலைவர் பக்தவச்சலம், கே.ஜி.ஐ.எஸ்.எல் – ன் நிர்வாக இயக்குநர் அசோக் பக்தவச்சலம், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் 48 கல்லூரிகள் கலந்து கொண்டுள்ளனர்.