கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் செந்தில்பாலாஜி

மாநிலம் முழுவதும் சீரான மின் விநியோகம் உள்ளதாகவும், கோடை காலத்திலும் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், ரவி, சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து மின்சாரத் துறை அமைச்சர் கூறியதாவது: தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

துணை மின் நிலையங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட வேண்டுமோ, அங்கெல்லாம் ஆய்வு செய்து இந்த ஆண்டே புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். கடந்த ஓராண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், வரும் 16ம் தேதி காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகளுடன் முதலமைச்சர் பேசவுள்ளதாக தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் சீரான மின் விநியோகம் உள்ளதாகவும், கோடை காலத்திலும் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.