பிரசன்ன விநாயகர் கோவிலில் 6 ஆம் ஆண்டு விழா

கோவை கணபதி சத்தி சாலை டெக்ஸ்டூல் எதிர்புறம் அமைந்துள்ள பிரசன்ன விநாயகர் கோயிலின் 6 ஆம் ஆண்டு விழா திங்கள் கிழமையன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சிரவை குமர குருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேள்வி வழிபாடு, அபிஷேக பூஜை, திருக்குட நீராட்டு, பேரொளி வழிபாடுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் செல்வம் ஏஜென்சிஸ் உரிமையாளர் நந்தகுமார், துடியலூர் முருகன் தியேட்டர் பழனிசாமி, கணபதி அருணாச்சலம், புவனேஸ்வரன், சுந்தரராஜன், ஈஸ்வரன், லக்கி குட்டி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.