கற்பகம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

கற்பகம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை நிற கோட் வழங்கும் விழா மற்றும் அவர்களுக்கான வரவேற்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

கற்பகம் கல்விக் குழுமத்தின் தலைவர் இராச.வசந்தகுமார் விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவில் கல்விக் குழுமத்தின் அறங்காவலர் தமயந்தி, மருத்துவக் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.