இந்தியர்களுக்கே உரிய திறன் – ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்

மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர். சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் அதிக பாரத்தை ஏற்றி செல்லும் தம்பதிகளின் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர், அதிகளவிலான பொருட்களை எப்படி எடுத்து செல்வது என்ற திறன் இந்தியர்களுக்கு மட்டுமே தெரியும் எனவும் பதிவிட்டுள்ளார்.

அந்த படத்தில் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் கிட்டத்தட்ட 50 நாற்காலிகளையும் முன்புறம் பாய்களையும் அடுக்கி கொண்டு மனைவியுடன் செல்லும் புகைப்படத்தை சுட்டிக்காட்டி இந்தியா ஏன் உலகிலேயே அதிக இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கிறது என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

ஒரு சதுர அங்குல சக்கரத்திற்கு அதிக அளவு சரக்குகளை எப்படி எடுத்துச் செல்வது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அப்படித்தான் என்று பதிவிட்டுள்ளார்.