அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு – நா.கார்த்திக் வாழ்த்து

புதுடெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா. கார்த்திக் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கட்டிடத்தின் இரண்டு புறங்களில் அமைக்கப்பட்டிருந்த திமுகவின் நிறுவனர் அண்ணாவின் சிலையை கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திறந்துவைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை கட்சியின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக்குழு தலைவருமான டி.ஆர்.பாலு திறந்து வைத்தார்.