பாரத மாதா சார்பில் அன்னதானம்

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

சாலையோர முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், செக்யூரிட்டி தொழிலாளர்கள், பகுதிவாழ் பொதுமக்கள் மற்றும் வடவள்ளி கோகுலாஸ்ரமம் இல்லத்தில் உள்ள குழந்தைகள், செளரிபாளையத்தில் உள்ள கானான் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட 650-க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் கெளரி சங்கர், ராஜா, கமலக்கண்ணன், கார்த்திக், பிரவீன், பிரகாஷ், ஷ்யாம், சுரேஷ், மெய்யரசன், சக்தி மற்றும் சுபஸ்ரீ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.