பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணி: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

கோவை பீளமேடு பகுதியில் நகர பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளுக்காக தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அடிக்கல் நாட்டினார்.

கோவை மாவட்டம் வார்டு எண் 26 க்குட்பட்ட, பீளமேடு, பயனீர் மில் சாலையில் தமிழக 15 வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில், நகர பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது,

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்,

முன்னதாக, துவக்கவிழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சரை வரவேற்கும் விதமாக, 26 வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, பொன்னாடை வழங்கி வரவேற்றார்,

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி, மதிமுக மாவட்ட துணை செயலாளர் ஆர். சற்குணம், பகுதி செயலாளர் எஸ்.பி வெள்ளியங்கிரி, பொதுக்குழு உறுப்பினர் பயனீர் தியாகு என பலரும் கலந்து கொண்டனர்.