ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் வானுர்தியல் துறை மற்றும் கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து கல்லூரியின் வானுர்தியல் துறை தலைவர் டேவிட் இரத்னராஜ், வேலை வாய்ப்பு அதிகாரி ஜோசுவா ராய், கேப்ஜெமினியின் நிர்வாக இயக்குநர் சந்திரா ரெட்டி மற்றும் நிர்வாக துணைத் தலைவர் பிரசாத் ஷெட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வானுர்தியல் துறை மாணவர்களை கேப்ஜெமினி நிறுவனத்தில் பயிற்றுவிப்பதற்கும் பணியமர்த்துவதற்கு உதவும். இதற்காக மாணவர்களை, கேப்ஜெமினி மற்றும் கல்லூரியின் வல்லுநர்கள் குழு தயார் செய்வதையும் இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.

 

Source: Press Release