ஸ்ரீநிவாஸப் பெருமாள் திருக்கோயிலில் மாபெரும் கும்பாபிஷேகம்

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் திருக்கோயிலில் இன்று  கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீமத் அஹோபிலமடம் 46வது ஜீயர் அவர்களது முன்னிலையில், பரம்பரை தர்மகர்த்தா சஞ்ஜய் ஜெயவர்தனவேலு தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் கோயில் நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.