உக்ரைன் உடன் தற்காலிக போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு

மக்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய நாட்டின் போர் படைகள் கடந்த 9 நாட்களாக உக்ரைன் மீது கடுமையான போர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். போரை நிறுத்துவதற்க்கான பேச்சு வார்த்தைகளும் தோல்வியை தழுவின.

இந்நிலையில் பொதுமக்கள் உள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பில் மாணவர்களை மீட்கும் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. ரஷ்யா நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்திய நேரப்படி காலை 11.30 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.