முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

தி.மு.க.தலைவரும், தமிழக முதல்வரின் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை 30 வது வட்ட கழகம் சார்பாக பொதுமக்களுக்கு, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தி.மு.க.தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் 69 வது பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுக்க திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை கணபதி பகுதியில் 30 வது வட்ட கழகம் சார்பாக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 30 வது வட்ட கழக செயலாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இதில் கட்சி கொடியேற்றி அந்த பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில் மாநகராட்சி 30 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா அந்த பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில்முன்னாள் மேயர் ராஜ்குமார், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் நந்த குமார், மற்றும் 30 வது பகுதி கழக நிர்வாகிகள் செந்தில்குமார் செங்குட்டுவன், வழக்கறிஞர் அன்புச்செல்வன், தனபாலன் சுரேஷ்குமார், சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.