பி.எஸ்.ஜி பார்மசி கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி பார்மசி கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பி.எஸ்.ஜி பார்மசி கல்லூரியின் முதல்வர் ராமநாதன் வரவேற்புரை வழங்கினார்.

பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் நிகழ்விற்கு தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் 2014 முதல் 2018 வரையிலான கல்வி ஆண்டுகளில் பயின்ற இளங்கலை மற்றும் முதுகலையைச் சேர்ந்த 260 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

பார்மசி மாணவர்களுக்கான உறுதிமொழியை பேராசிரியர் ப்ரூடன்ஸ் வழிமொழிந்தார்.

தொடர்ந்து கல்லூரியில் படிப்பு விளையாட்டு என சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. மேலும் கல்லூரியின் சிறந்த மாணவர்களுக்கான விருதும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறந்த மாணவர்களுக்கான ‘பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு’ விருதை பார்மசி இளங்கலை மாணவிகள் ஜாய் கிறிஸ்டி, தர்ஷினி மற்றும் பார்ம் டி மாணவிகள் டோனியா லாரன்ஸ், சுலேகா ஆகியோர் பெற்றனர்.

இவ்விழாவில் பெற்றோர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.