15 வது வார்டில் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன் – காங்கிரஸ் வேட்பாளர் சாந்தாமணி

கோவை மாநகராட்சி 15 வது வார்டு பகுதியில் குடிதண்ணீர், சாலை வசதி தெருவிளக்கு போன்ற அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு முதல்கட்டமாக தீர்வு காண்பேன் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சாந்தாமணி உறுதியளித்துள்ளார்.

கோவை மாநகராட்சி 15 வது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாந்தாமணி போட்டியிடுகிறார்.

வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சாந்தாமணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கடந்த 10 ஆண்டுகளாக வார்டில் எந்தவிதமான அத்தியாவசிய பணிகளும் நடைபெறவில்லை எனவும் நான் வெற்றி பெற்றால் இந்த வார்டில் குடிநீர், சாலை வசதி, சாக்கடை கால்வாய் மற்றும் தெருவிளக்கு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து, தி.மு.க 15 வது வார்டு வட்டசெயலாளர் சந்திரசேகரன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.