துவக்கப் பள்ளியின் வகுப்பறை, கழிப்பறையை புதுப்பித்து வழங்கும் ஆற்றல் ஃபவுண்டேஷன்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட லக்காபுரம் பஞ்சாயத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டிடத்தை ஆற்றல் ஃபவுண்டேஷன் புதுப்பித்து வழங்குகிறது.

“மக்கள் நலனே எங்கள் நலன்” என்ற நோக்கத்துடன் இதன் தலைவர் ஆற்றல் அசோக் செயல்பட்டு வருகிறார். மக்களின் தேவைகளையும் குறைகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்து சமுதாய் வளர்ச்சிக்கு செயலாற்றும் வகையில் இந்த அமைப்பு திறமையான மற்றும் அர்ப்பணிப்பு உள்ள உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பானது ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தேவையான அத்தியாவசிய உள்கட்டமைப்பு மற்றும் இதர தேவைகளை ஆய்வு செய்து அதை பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட லக்காபுரம் பஞ்சாயத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் ஆற்றல் அசோக் அவர்களால் ஒப்படைக்கப்படுகிறது. அரசு மற்றும் பிற சமூக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழக மேம்பாட்டிற்காக இந்த அமைப்பு அரும்பணியாற்றி வருகிறது.

மேலும், நோயற்ற சுத்தமான, சுகாதார வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், அனைத்துப் பகுதிகளுக்கும் சுத்தமான குடிநீர் வசதியை அமைத்து தருதல், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கான வீட்டுவசதிகள் மற்றும் மின் இணைப்பு வசதிகள் அமைத்துத் தருதல் உள்ளிட்ட பணிகளிலும் ஆற்றல் ஃபவுண்டேஷன் ஈடுபட்டு வருகிறது.