பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் பூமி பூஜை

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.எஸ்.ஜி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக ‘அலுமினி பிளாட்டினம் ஜூப்லி’ என்ற திறந்தவெளி ஆடிட்டோரியம் கட்டுவதற்கான பூமி பூஜை செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திரன், கல்லூரி முதல்வர் பிருந்தா, முன்னாள் தலைவர்கள் லட்சுமி நாராயணசுவாமி, நந்தகோபால் மற்றும் துணைத் தலைவர் ஜெய்குமார் ராம்தாஸ், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.