குடியரசு தினத்தையொட்டி கோவையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

கோவை வ.உ.சி மைதானத்தில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

கோவையில் ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின கொடியேற்று விழா வ.உ.சி பூங்கா மைதானத்தில் விமர்சியாக நடப்பது வழக்கம். இந்த நாளில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி போலீஸ் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கம் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்குவார்.

மேலும், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் ஆட்சியர் ஏற்றுக்கொள்வார். குடியரசு தின விழா நாளை கொண்டாட்டப்பட உள்ள நிலையில் மாநகர போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக நாளை நடைபெறும் விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 2000 பேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.