டி.என்.பி.எஸ்.சி: கோவையில் பதிவு செய்த பாதி பேர் கூட தேர்வு எழுதவில்லை

கோவையில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 2 மையங்களில் (அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி) தேர்வு நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் 419 பேர் தேர்வு எழுதிய பதிவு செய்திருந்த நிலையில் இரு மையங்களிலும் சேர்த்து 167 பேர் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர். மேலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் துவங்கியுள்ள இந்த தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும்.