தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக வரும்.20ஆம் தேதி நடைபெற இருந்த அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

எழுத்துத் தேர்வுகள் மட்டுமே ஒத்திவைக்கப்படுவதாகவும், செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

கொரோனா பரவல் குறைந்த பிறகே தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், விடுமுறை காலத்தை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் கூறிய அவர், கல்லூரிகள் திறப்பு பற்றி ஒரு வாரத்திற்கு முன்பாக தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தாக்கம் குறைந்த பிறகு பின்னர் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.